திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3806 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3806இராமாநுச நூற்றந்தாதி || 30
இன்பந் தரு பெரு வீடு வந் தெய்திலென்? எண்ணிறந்த துன்பந் தரு நிர யம் பல சூழிலென்? தொல்லுலகில் மன் பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுச னென்னை ஆண்டனனே
பதவுரை Show / Hide
தொல் உலகில், Thol Ulagil - ‘அநாதியான இவ் வுலகத்தில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின், Man Pal Uyirkadku Irayavan Mayin - நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’
என மொழிந்த, En Mozhindha - என்று (பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
அன்பன், Anban - பரம காருணிகராய்
அனகன், Anagan - நிர்த் தோஷரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என்னை ஆண்டனன், Ennai Andanan - என்னை அடிமை கொண்டருளினார்;
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என், Inbam Tharu Peru Veedu Vandu Eydhil En - ஆநந்தாவஹமான மோக்ஷம் வந்து ஸித்தித்தாலெனன?
எண்  இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என், En Irandha Thunbam Tharu Pala Nirayam Soozhil En - அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் தான் என்ன?