திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3806 | இராமாநுச நூற்றந்தாதி || 30 | இன்பந் தரு பெரு வீடு வந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தரு நிர யம் பல சூழிலென்? தொல்லுலகில்
மன் பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுச னென்னை ஆண்டனனே | பதவுரை Show / Hideதொல் உலகில், Thol Ulagil - ‘அநாதியான இவ் வுலகத்தில் மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின், Man Pal Uyirkadku Irayavan Mayin - நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’ என மொழிந்த, En Mozhindha - என்று (பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த அன்பன், Anban - பரம காருணிகராய் அனகன், Anagan - நிர்த் தோஷரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என்னை ஆண்டனன், Ennai Andanan - என்னை அடிமை கொண்டருளினார்; இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என், Inbam Tharu Peru Veedu Vandu Eydhil En - ஆநந்தாவஹமான மோக்ஷம் வந்து ஸித்தித்தாலெனன? எண் இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என், En Irandha Thunbam Tharu Pala Nirayam Soozhil En - அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் தான் என்ன? |