திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3810 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3810இராமாநுச நூற்றந்தாதி || 34
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின் நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப் புகழே
பதவுரை Show / Hide
இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய
நயம் புகழ், Nayam Pugazh - கல்யாணகுணங்களானவை
நிலத்தை செறுத்து உண்ணும் நீசம், Nilaththai Seruththu Unnum Neesam - பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான
கலியை, Kaliyai - கலிபுருஷனாடைய
நினைப்பு அரிய பெலத்தை செறுத்தும், Ninaippu Ariya Pelathai Seruththum - இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமப்தைத் தொலைத்தவளவிலம்
பிறங்கியது இல்லை, Pirangiyathu Illai - பிரகாசிக்கவில்லை;
என் பெய் வினை, En Pey Vinaik - என்னாலே செய்யப்பட்ட பாவங்களை
தென் புலத்தில், Then Pulathil - யமலோகத்தில்
பொறித்த, Poriththa - எழுதிவைத்த
அப் புத்தகம் சும்மை, Ap Puththagam Summaa - அந்த புஸ்தகக் கட்டுகளை
பொறுக்கிய பின், Porukkiya Pin - கொளுத்திவிட்டபின்பு
நலத்தை பொறுத்தது, Nalaththai Poruththathu - விளக்கம் பெற்றன.