திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3811 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3811இராமாநுச நூற்றந்தாதி || 35
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப் புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில் மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் அருவினை என்னை யெவ் வாறின் றடர்ப்பதுவே?
பதவுரை Show / Hide
ஒரு தெய்வம், Oru Deivam - வேறொரு தெய்வத்தை
நயவேன், Nayaven - விரும்பமாட்டேன்
நால் நிலத்தே, Naal Nilaththae - இவ் வுலகில்
சில மானிடத்தை, Sila Maanidaththai - சில நீச மனிதர்களைக் குறித்து
புயலே என, Puyale Enna - ‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி
கவி போற்றி செய்யேன், Kavi Poattri Seyyen - கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்;
பொன் அரஙகம் என்னில், Pon Arangakam Ennil - ‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே
மயல் பெருகும், Mayal Perugum - அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
மன்னா மா மலர்த் தாள், Mannaa Maa Malarth Thaal - பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை
அயரேன், Ayarein - மறக்க மாட்டேன்;
அயரேன், Ayarein - கொடிய பாவங்கள்
என்னை, Ennai - என்னை
இன்று, Indru - இன்று முதலாக
எவ்வாறு அடர்ப்பது, Evvaru Adarppathu - எப்படி ஆக்ரமிக்கக் கூடும்?