திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3811 | இராமாநுச நூற்றந்தாதி || 35 | நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை யெவ் வாறின் றடர்ப்பதுவே? | பதவுரை Show / Hideஒரு தெய்வம், Oru Deivam - வேறொரு தெய்வத்தை நயவேன், Nayaven - விரும்பமாட்டேன் நால் நிலத்தே, Naal Nilaththae - இவ் வுலகில் சில மானிடத்தை, Sila Maanidaththai - சில நீச மனிதர்களைக் குறித்து புயலே என, Puyale Enna - ‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி கவி போற்றி செய்யேன், Kavi Poattri Seyyen - கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்; பொன் அரஙகம் என்னில், Pon Arangakam Ennil - ‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே மயல் பெருகும், Mayal Perugum - அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய மன்னா மா மலர்த் தாள், Mannaa Maa Malarth Thaal - பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை அயரேன், Ayarein - மறக்க மாட்டேன்; அயரேன், Ayarein - கொடிய பாவங்கள் என்னை, Ennai - என்னை இன்று, Indru - இன்று முதலாக எவ்வாறு அடர்ப்பது, Evvaru Adarppathu - எப்படி ஆக்ரமிக்கக் கூடும்? |