திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3812 | இராமாநுச நூற்றந்தாதி || 36 | அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப், பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திடத்தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின்
படரும் குணன், எம் இராமானுசன் றன் படி யிதுவே | பதவுரை Show / Hideஅடல் கொண்ட நேமியன், Adal Konda Nemiyan - (ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய் ஆர் உயிர் நாதன், Ar Uyir Nathan - ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான் அன்று, Andru - அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில் ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப, Aranach Sol Kadal Konda On Porul Kandu Alippa - வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க பின்னும், Pinnum - அதற்குப் பின்பும் காசினியோர், Kasinivor - பூமியிலுள்ளவர்கள் இடரின் கண் வீழ்ந்திட, Idarin Kan Vizhndhida - ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க, தானாம், Thanam - (எம்பெருமானாராகிற தாமும் அ ஒன் பொருள் கொண்டு, A On Porul Kondo - (முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு அவர் பின்படரும் குணன், Avar Pinpadarum Gunam - அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய வடி இது, Vadi Ithu - ஸ்வபாவம் இது. |