திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3813 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3813இராமாநுச நூற்றந்தாதி || 37
படி கொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும்,அன்பர் கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர் அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே
பதவுரை Show / Hide
படி கொண்ட கீர்த்தி, Padi Konda Keerthi - உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான
இராமாயணம் என்னும், Iramayanam Ennum - ஸ்ரீ ராமாயண மென்கின்ற
பக்தி வெள்ளம், Bhakti Vellam - பக்தி ஸமுத்திரம்
குடி கொண்ட கோயில், Kudi Konda Koyil - நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
குணம் கூறும் அன்பர், Gunam Kurum Anbar - திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய
கடி  கொண்ட மா மாலர்த் தாள், Kadi Konda Maa Malarth Thal - மணம் மிக்குச் சிறந்த பாதார விந்தங்களில்
உள்ளம் கலந்து, Ullam Kalandu - நெஞ்சு பொருந்தி
கனியும், Kaniyum - ஸ்நேஹித்திருக்கின்ற
நல்லோர், Nallor - மஹாநுபவர்கள்
அடி கண்டு கொண்டு, Adi Kandu Kondo - (இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து  கொண்டு
உகந்து, Ugandhu - ஆதரித்து
என்னையும், Ennaiyum - அடியேனையும்
அவர்க்கு, Avarkku - அவ்வெம்பெருமானார்க்கு
ஆள் ஆக்கினர், Aal Aakkinar - ஆட் படுத்தினார்கள்