திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3814 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3814இராமாநுச நூற்றந்தாதி || 38
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே போக்கிப் புறத்திட்ட தென் பொருளா?முன்பு புண்ணியர் தம் வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால், உரையா யிருந்த நுண் பொருளே
பதவுரை Show / Hide
என்னை, Ennai - (நெடுநாளாக அஹங்காரியாய்க்கிடந்த) என்னை
இன்று, Indru - இன்றைக் தினத்தில்
ஆக்கி, Aakki - ஒரு பொருளாக்கி
அடிமை, Adimai - சேஷத்வத்தில்
நிலைப்பித்தனை, Nilaippiththanai - நிலைநிறுவத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்)
முன்பு, Munbu - முற்காலமெல்லாம்
அவமே போக்கி, Avame Pokki - வீணாகப் போக்கி
புறந்து இட்டது, Purandhu Ittathu - வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது
என் பொருளா, En Porulaa - என்ன நிமித்தாக?
புண்ணியர் தம், Punniyar Tham - (தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கிய சாலிகளுடைய
வாக்கில் பிரியா, Vaakkil Priyaa - வாக்கை விட்டுப் பிரியாத
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
தெரிவு அரிது, Therivu Aridhu - அறிய முடியாததாக நின்றது;
இந்த நுண் பொருள், Indha Nun Porul - இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை
உரையாய், Uraiyaai - தேவரீரே அருளிச் செய்ய வேணும்