திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3814 | இராமாநுச நூற்றந்தாதி || 38 | ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா?முன்பு புண்ணியர் தம்
வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால், உரையா யிருந்த நுண் பொருளே | பதவுரை Show / Hideஎன்னை, Ennai - (நெடுநாளாக அஹங்காரியாய்க்கிடந்த) என்னை இன்று, Indru - இன்றைக் தினத்தில் ஆக்கி, Aakki - ஒரு பொருளாக்கி அடிமை, Adimai - சேஷத்வத்தில் நிலைப்பித்தனை, Nilaippiththanai - நிலைநிறுவத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்) முன்பு, Munbu - முற்காலமெல்லாம் அவமே போக்கி, Avame Pokki - வீணாகப் போக்கி புறந்து இட்டது, Purandhu Ittathu - வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது என் பொருளா, En Porulaa - என்ன நிமித்தாக? புண்ணியர் தம், Punniyar Tham - (தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கிய சாலிகளுடைய வாக்கில் பிரியா, Vaakkil Priyaa - வாக்கை விட்டுப் பிரியாத இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! தெரிவு அரிது, Therivu Aridhu - அறிய முடியாததாக நின்றது; இந்த நுண் பொருள், Indha Nun Porul - இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை உரையாய், Uraiyaai - தேவரீரே அருளிச் செய்ய வேணும் |