திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3816 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3816இராமாநுச நூற்றந்தாதி || 40
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற் காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான் வாமனன் சீலன், இராமானுசன் இந்த மண்மிசையே
பதவுரை Show / Hide
சேமம் நல்வீடும், Semam Nalveedu - (அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம்
பொருளும், Porulum - அர்த்தமும்
தருமமும், Dharumamum - தர்மமும்
சீர்ய நல் காமமும், Seerya Nal Kaamamum - மிகவுஞ் சிறந்த காமமும்
என்ற இவை, Endra Ivai - ஆக இப்படி சொல்லப் பட்டுள்ள இவை
நான்கு என்பர், Naanthu Enbar - நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்;
நான்கினும், Naanthinum - இந்த நான்கு புருஷார்த்தங்களுள்
காமம், Kaamam - காமமாவது
கண்ணனாக்கே ஆமது, Kannanaakke Aamuthu - எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது;
அறம் பொருள் வீடு, Aram Porul Veedu - தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும்
இதற்கு என்று, Idharku Endru - இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று
வாமநன் சீலன் இராமாநுசன், Vamanan Seelan Iraamaanusan - வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார்
இந்த மண்மிசை உரைத்தான், Indha Manmichai Uraiththaan - இவ் வுலகத்தில் அருளிச் செய்தார்