திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3820 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3820இராமாநுச நூற்றந்தாதி || 44
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக் கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே
பதவுரை Show / Hide
அகல் இடத்தோர், Akal Idaththoor - விசாலமான இப் பூமியிலுள்ளவர்கள்,
சொல்ஆர் தமிழ் ஒரு மூன்றும், Sola Ar Tamil Oru Moondrum - சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத் தமிழையும்
சுருதிகள் நான்கும், Surudhigal Naanthum - நான்கு வேதங்களையும்
எல்லை இல்லா அறம் நெறி யாவும், Ellai Illaa Aram Nerai Yaavum - கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும்
தெரிந்தவன், Therindhavan - அறிந்தவராயும்,
எண் அரு சீர், Enn Aru Seer - எண்ண முடியாத குணங்களையுடையவராயும்
நல்லார் பரவும், Nallaar Paravum - ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
திருநாமம், Thirunamam - திரு நாமத்தை
நம்பி கல்லார், Nambi Kallaar - (என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை;
எதுபேறு என்று காமிப்பரே!, Edhu Peru Endru Kaamipparae - நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ!