திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3820 | இராமாநுச நூற்றந்தாதி || 44 | சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே | பதவுரை Show / Hideஅகல் இடத்தோர், Akal Idaththoor - விசாலமான இப் பூமியிலுள்ளவர்கள், சொல்ஆர் தமிழ் ஒரு மூன்றும், Sola Ar Tamil Oru Moondrum - சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத் தமிழையும் சுருதிகள் நான்கும், Surudhigal Naanthum - நான்கு வேதங்களையும் எல்லை இல்லா அறம் நெறி யாவும், Ellai Illaa Aram Nerai Yaavum - கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும் தெரிந்தவன், Therindhavan - அறிந்தவராயும், எண் அரு சீர், Enn Aru Seer - எண்ண முடியாத குணங்களையுடையவராயும் நல்லார் பரவும், Nallaar Paravum - ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய திருநாமம், Thirunamam - திரு நாமத்தை நம்பி கல்லார், Nambi Kallaar - (என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை; எதுபேறு என்று காமிப்பரே!, Edhu Peru Endru Kaamipparae - நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ! |