திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3821 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3821இராமாநுச நூற்றந்தாதி || 45
பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற் காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத் தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே
பதவுரை Show / Hide
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
நின் சரண் அன்றி, Nin Saran Andri - தேவரீருடைய திருவடிகளைத் தவிர
மற்று பேறு ஒன்றும் இல்லை, Mattru Peru Ondrum Illai - உபேயம் வேறொன்று மில்லை;
அப் பேறு அளித்தற்கு, Ap Peru Aliththarku - தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு
அச் சரண் அன்றி, Ach Saran Andri - அத் திருவடிகள் தவிர
மற்று ஆறு ஒன்றும் இல்லை, Mattru Aaru Ondrum Illai - வேறு உபாயம் ஒன்று மில்லை;
என்ற இப் பொருளை, Endra Ip Porulai - என்கிற இவ் வுண்மைப் பொருளை