திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3822 | இராமாநுச நூற்றந்தாதி || 46 | கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே | பதவுரை Show / Hideகூறும் சமயங்கள் ஆறும் குலைய, Koorum Samayangkal Aarum Kulaiya - மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலைமடங்கும்படி குவலயத்தே, Kuvalayatthae - இப் பூ மண்டலத்திலே மாறன் பணித்த மறை, Maan Paniththa Marai - நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை உணர்ந்தோனை, Unarnthoonai - கற்று அறிந்தவராயும் மதியிலியேன் தேறும்படி, Madhiyiliyeen Theerumpadi - ஜ்ஞாநஹீகனான நானும் தெளியும்படியாக என் மனம் புகுந்தானை, En Manam Pugunthaanai - என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும் திசை அனைத்தும் ஏறும் குணனை, Thisai Anaiththum Aarum Gunanai - எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயுமிருக்கிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை இறைஞ்சினம், Irainjinam - வணங்கினோம். |