திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3822 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3822இராமாநுச நூற்றந்தாதி || 46
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன் தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே
பதவுரை Show / Hide
கூறும் சமயங்கள் ஆறும் குலைய, Koorum Samayangkal Aarum Kulaiya - மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலைமடங்கும்படி
குவலயத்தே, Kuvalayatthae - இப் பூ மண்டலத்திலே
மாறன் பணித்த மறை, Maan Paniththa Marai - நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை
உணர்ந்தோனை, Unarnthoonai - கற்று அறிந்தவராயும்
மதியிலியேன் தேறும்படி, Madhiyiliyeen Theerumpadi - ஜ்ஞாநஹீகனான நானும் தெளியும்படியாக
என் மனம் புகுந்தானை, En Manam Pugunthaanai - என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும்
திசை அனைத்தும் ஏறும் குணனை, Thisai Anaiththum Aarum Gunanai - எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயுமிருக்கிற
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
இறைஞ்சினம், Irainjinam - வணங்கினோம்.