திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3824 | இராமாநுச நூற்றந்தாதி || 48 | நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே? | பதவுரை Show / Hideபுன்மையிலோர் பருகம் பெருமை இராமாநுச, Punmaiyiloor Parugam Perumai Raamaanusa - மஹான்கள் பேச வேண்டும்படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே! நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு, Nigar Inri Nindra En Neesathai - என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு நின் அருளின் கண் அன்றி, Nin Arulin Kan Andri - தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர புகல் ஒன்றும் இல்லை, Pugal Ondrum Illai - வேறு எவ் விடத்திலும் ஒதுங்க இடமில்லை அருட்கும், Arutkum - தேவரீருடைய அந்த க்ருபைக்கும் அஃதே புகல், Ahdhe Pugal - (என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ் வகையாலே) இருவோமுக்கும் பயன் ஆனபின், Irivomukkum Payan Anapin - அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு இனி, Ini - இனி மேலும் பழுதே, Pazhudhe - வியர்த்தமான அகலும் பொருள் என்ன, Akalam Porul Enna - பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன? |