திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3827 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3827இராமாநுச நூற்றந்தாதி || 51
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர் முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப் படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற் காலத்தில்
அடியை தொடர்ந்து, Adiyai Thodarndu - திருவடிகளை அவலம்பித்து
எழும், Ezhum - செருக்கிக் கிளர்ந்த
ஐவீர்கட்கு ஆய், Aivirkadku Aayi - பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு)
பாரதப் போர், Bharatap Por - பாரத யுத்தத்திலே
முடிய, Mudiya - (துரியோதநாதிகள்) மாளும் படியாக
பரி நெடு தேர், Pari Nedu Ther - குதிரை பூண்ட பெரிய தேரை
விடும், Vidum - நடத்தின
கோனை, Konai - ஸர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த, Muzhuthu Unarntha - (ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட
அடியார்க்கு, Adiyarkku - பாகவதர்களுக்கு
அமுதம், Amudham - பரம போக்யமான
இப் படியில், Ip Padiyil - இப் பூ மண்டலத்தில்
வந்து பிறந்தது என்னை ஆள, Vandhu Pirandhadhu Ennai Aala - வந்து அவதரித்தது  (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்;