திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3827 | இராமாநுச நூற்றந்தாதி || 51 | அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற் காலத்தில் அடியை தொடர்ந்து, Adiyai Thodarndu - திருவடிகளை அவலம்பித்து எழும், Ezhum - செருக்கிக் கிளர்ந்த ஐவீர்கட்கு ஆய், Aivirkadku Aayi - பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு) பாரதப் போர், Bharatap Por - பாரத யுத்தத்திலே முடிய, Mudiya - (துரியோதநாதிகள்) மாளும் படியாக பரி நெடு தேர், Pari Nedu Ther - குதிரை பூண்ட பெரிய தேரை விடும், Vidum - நடத்தின கோனை, Konai - ஸர்வேஸ்வரனை முழுது உணர்ந்த, Muzhuthu Unarntha - (ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட அடியார்க்கு, Adiyarkku - பாகவதர்களுக்கு அமுதம், Amudham - பரம போக்யமான இப் படியில், Ip Padiyil - இப் பூ மண்டலத்தில் வந்து பிறந்தது என்னை ஆள, Vandhu Pirandhadhu Ennai Aala - வந்து அவதரித்தது (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்; |