திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3828 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3828இராமாநுச நூற்றந்தாதி || 52
பார்த்தான் அறு சம யங்கள் பதைப்ப,இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினே னிடைத் தான் புகுந்து தீர்த்தான் இரு வினை தீர்த் தரங்கன் செய்ய தாளிணையோ டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே
பதவுரை Show / Hide
அறு சமயங்கள், Aru Samayangkal - (வேத பாஹ்யங்களான) ஆறு சமயங்கள் துடிக்கும் படியாக
பதைப்ப பார்த்தான், Padhaippa Paarthaan - திருக் கண் செலுத்தினார்;
இப் பார் முழுவதும், Ip Paar Muzhuvadhum - இப் பூமண்டலம் முழுவதையும்
புகழ் கொண்டு, Pugazh Kondo - தமது கீர்த்தியினாலே
போர்த்தான், Poorththaan - மூடி விட்டார்;
புன்மையினேனிடை, Punmaiyinenaidai - நீசனான அடியேன் பக்கலிலே
தான் புகுந்து, Thaan Pugundhu - தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து
இரு வினை, Iru Vinai - பெரிய பாவங்களை
தீர்த்தான், Theerththaan - போக்கி யருளினார்;
தீர்த்து, Theerthu - பாவங்களைப் போக்கினது மன்றியில்
அரங்கன், Arangan - ஸ்ரீ ரங்கநாதனுடைய
செய்ய தாள் இணையோடு ஆர்த்தான், Seyya Thaal Inaiyodu Aarththaan - அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்;
இவை, Ivai - ஆகிய இக் காரியங்களெல்லாம்
எம் இராமாநுசன் செய்யும் அற்புதம், Em Iraamaanusan Seyyum Arputham - எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம்