திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3828 | இராமாநுச நூற்றந்தாதி || 52 | பார்த்தான் அறு சம யங்கள் பதைப்ப,இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினே னிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த் தரங்கன் செய்ய தாளிணையோ
டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே | பதவுரை Show / Hideஅறு சமயங்கள், Aru Samayangkal - (வேத பாஹ்யங்களான) ஆறு சமயங்கள் துடிக்கும் படியாக பதைப்ப பார்த்தான், Padhaippa Paarthaan - திருக் கண் செலுத்தினார்; இப் பார் முழுவதும், Ip Paar Muzhuvadhum - இப் பூமண்டலம் முழுவதையும் புகழ் கொண்டு, Pugazh Kondo - தமது கீர்த்தியினாலே போர்த்தான், Poorththaan - மூடி விட்டார்; புன்மையினேனிடை, Punmaiyinenaidai - நீசனான அடியேன் பக்கலிலே தான் புகுந்து, Thaan Pugundhu - தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து இரு வினை, Iru Vinai - பெரிய பாவங்களை தீர்த்தான், Theerththaan - போக்கி யருளினார்; தீர்த்து, Theerthu - பாவங்களைப் போக்கினது மன்றியில் அரங்கன், Arangan - ஸ்ரீ ரங்கநாதனுடைய செய்ய தாள் இணையோடு ஆர்த்தான், Seyya Thaal Inaiyodu Aarththaan - அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்; இவை, Ivai - ஆகிய இக் காரியங்களெல்லாம் எம் இராமாநுசன் செய்யும் அற்புதம், Em Iraamaanusan Seyyum Arputham - எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம் |