திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3829 | இராமாநுச நூற்றந்தாதி || 53 | அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே | பதவுரை Show / Hideஎன்னை ஆள வந்த, Ennai Aala Vandha - என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த கற்பகம், Karppagam - உதாரரும் கற்றவர் காமூது சீலன், Kattravar Kaamuthu Seelan - ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தை யுடையவரும் அற்புதன், Arputhan - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையரும் செம்மை, Semmai - ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார், கருத அரிய பல் பல் உயிர்களும், Karutha Ariya Pal Pal Uyirgalum - நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும் பல் உலகு யாவும், Pal Ulagu Yaavum - அவ் வாத்மாக்களுக்கு இருப் பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும் பரனது என்னும் நல் பொருள் தன்னை, Paranathu Ennum Nal Porul Thannai - எம்பெருமானுடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை இ நானிலேததே, I Naanilaethathe - இவ் வுலகத்திலே வந்து, Vandhu - வந்தவதரித்து நாட்டினன், Naatinann - ஸ்தாபித்தருளினார். |