திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3831 | இராமாநுச நூற்றந்தாதி || 55 | கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடியா மெங்கள் கோக்குலமே | பதவுரை Show / Hideதொகை இறந்த, Thogai Irandha - கணக்கில்லாத பண் தரு வேதங்கள், Pan Tharu Vedhangal - ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள் பார் மேல், Paar Mel - இப் பூமியிலே நிலவிட, Nilavidha - ஒங்கி வளரும்படி பார்த்தருளும், Paarttarulum - செய்தருளினவரும் கொண்டலை, Kondalai - பரம உதாரரும், கண்டவர் சிந்தை கவரும், Kandavar Sindhai Kavarum - கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற கடி பொழில், Kadi Pozhil - மண மிக்க சோலைகள் சூழ்ந்த தென் அரங்கன், Then Arangan - தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால் குலாவும், Kulavum - கொண்டாடப் படுபவருமான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை மேலி கொழும் குடி, Meli Kozhum Kudi - பொருந்தி ஆச்ரயிக்கிற குலம் எங்கள் கோக்குலம் ஆம், Engal Kokkulam Aam - எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம். |