திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3832 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3832இராமாநுச நூற்றந்தாதி || 56
கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும் ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்த பின், என் வாக்குரை யாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே
பதவுரை Show / Hide
கோக்குலம் மன்னரை, Kokkulam Mannarai - க்ஷத்திரிய குலத்து அரசர்களை
மூ எழு கால், Moo Ezhukal - இருபத்தொரு தலைமுறை யளவும்
ஒரு கூர் மழுவால், Oru Koora Mazhuval - கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே
போக்கிய, Pokkia - (பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின
தேவனை, Devanai - எம்பெருமானை
போற்றம், Pottam - துதிக்கின்ற
புனிதன், Punitan - பரம பரிசுத்தரும்,
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி, Puvanam Engum Aakkiya Keerthi - உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
அடைந்த பின், Adainda Pin - ஆச்ரயித்த பின்பு
இனி, Ini - மேலுள்ள காலமெல்லாம்
மற்று ஒன்றை, Mattru Ondrai - வேறு எந்த விஷயத்தையும்
என் வாக்கு, En Vaakku - எனது வாக்கானது
உரையாது, Uraiyaadhu - சொல்ல மாட்டாது;
என் மனம், En Manam - எனது மனமும்
நினையாது, Ninaiyadhu - நினைக்க மாட்டாது.