திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3832 | இராமாநுச நூற்றந்தாதி || 56 | கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்த பின், என்
வாக்குரை யாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே | பதவுரை Show / Hideகோக்குலம் மன்னரை, Kokkulam Mannarai - க்ஷத்திரிய குலத்து அரசர்களை மூ எழு கால், Moo Ezhukal - இருபத்தொரு தலைமுறை யளவும் ஒரு கூர் மழுவால், Oru Koora Mazhuval - கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே போக்கிய, Pokkia - (பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின தேவனை, Devanai - எம்பெருமானை போற்றம், Pottam - துதிக்கின்ற புனிதன், Punitan - பரம பரிசுத்தரும், புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி, Puvanam Engum Aakkiya Keerthi - உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை அடைந்த பின், Adainda Pin - ஆச்ரயித்த பின்பு இனி, Ini - மேலுள்ள காலமெல்லாம் மற்று ஒன்றை, Mattru Ondrai - வேறு எந்த விஷயத்தையும் என் வாக்கு, En Vaakku - எனது வாக்கானது உரையாது, Uraiyaadhu - சொல்ல மாட்டாது; என் மனம், En Manam - எனது மனமும் நினையாது, Ninaiyadhu - நினைக்க மாட்டாது. |