திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3833 | இராமாநுச நூற்றந்தாதி || 57 | மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே | பதவுரை Show / Hideமற்று ஒரு பேறு, Mattru Oru Peru - ப்ரயோஜநாந்தரங்களை மதியாது, Madhiyathu - கணிசியாமல் அரங்கன் மலர் அடிக்கு, Arangan Malai Adikku - அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு ஆள் உற்றவரே, Aal Utravarai - அடிமை பட்டவர்களையே தனக்கு உற்றவர் ஆ, Thanakku Utravar Aa - தமக்கு ஆத்ம பந்துக்களாக கொள்ளும், Kollum - திருவுள்ளம் பற்றுகிற உத்தமனை, Uthamanai - உத்தம புருஷராயும் நல் தவர் போற்றும், Nal Thavar Poattrum - ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவராயு மிருக்கிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை ,நானிலத்தே பெற்றனன், Naanilaththae Pettranan - இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்; பெற்ற பின், Pettra Pin - ஆச்ரயித்த பின்பு மற்று ஒரு பேதைமை அறியேன், Mattru Oru Paedhaimai Ariyeen - (வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன் |