திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3836 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3836இராமாநுச நூற்றந்தாதி || 60
உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய் மொழியின்- மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணந் திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே
பதவுரை Show / Hide
குணம் திகழ், Gunam Thigazh - ஆத்ம குணங்களால் விளங்குபவரும்
கொண்டல், Kondal - (ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும்
எம் குலம் கொழுந்து, Em Kulam Kozhundhu - எங்கள் குலத்துக்குத் தலைவருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும், Unarndha Mei Gnaniyar Yogam Thorum - கற்றுணர்ந்த தத்வ  ஞானிகளுடைய கோஷ்டிகளெங்கும்
திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும், Thiruvai Mozhiyin Manam Tharum In Isai Mannum Idam Thorum - திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும், Maa Malaraal Punarndha Pon Marban Porundhum Pathi Thorum - பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்
புக்கு நிற்கும், Pukku Nirkum - எழுந்தருளி யிருப்பார்.