திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3837 | இராமாநுச நூற்றந்தாதி || 61 | கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினை யால்,]நிரயத்
தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர்
தொழுந் தவத்தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக்
கெழுந்தது,அத்தால் நல்லதிசயங் கண்ட திரு நிலமே | பதவுரை Show / Hideஅருமுனிவர் தொழும், Arumunivar Thozhum - அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும் தவத்தோன், Thavaththon - ப்ரபத்தியாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய தொல் புகழ், Thol Pugazh - நித்யமான கல்யாண குணங்கள் கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால், Kozhundhu Vittu Odi Padarum Vemkool Vinaiyaal - மேன் மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ் கர்மத்தாலே நிரயத்து அழுந்தி யிட்டேனை, Nirayathu Azhundhi Ittena - ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது, Vandhu Aal Kondha Pinnum Sudar Mikku Ezhundhadhu - வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன: அத்தால், Aththal - அதைக் கண்டு இரு நிலம், Iru Nilam - விசாலமான இப் பூமண்டலம் நல்ல அதிசயம் கண்டது, Nalla Adhisayam Kandu - மிக்க ஆச்சரியங் கொண்டது. |