திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3838 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3838இராமாநுச நூற்றந்தாதி || 62
இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும் வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த்தாள் பொருந்தா நிலை யுடைப் புன்மை யினோர்க் கொன்றும் நன்மை செய்யாப் பெருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே
பதவுரை Show / Hide
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு, Manna Maa Thaal Malar Porundha Nilai Udai Punmaiyinorkku - சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான  நீசர் களுக்கு
ஒன்றும் நன்மை செய்ய, Ondrum Nanmai Seyya - ஒரு விதமான உபகாரமும் செய்யாத
பெரு தேவரை, Peru Devarai - பெரிய பெருமாளை போற்றுகின்ற
பெரியோர் தம், Periyor Tham - ஆழ்வானாகிற மஹானாடைய
சுழல் இன்று பிடித்து, Suzhal Inru Pidithu - திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன், Iru Vinai Paasam Kazhatri Irundhen - புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்;
யான், Yaan - இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்
இனி இறையும் வருந்தேன், Ini Irainum Varunthen - இனி மேல் கொஞ்சங்கூட வருத்தப் பட்ட மாட்டேன்.