திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3838 | இராமாநுச நூற்றந்தாதி || 62 | இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும்
வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலை யுடைப் புன்மை யினோர்க் கொன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே | பதவுரை Show / Hideஎம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு, Manna Maa Thaal Malar Porundha Nilai Udai Punmaiyinorkku - சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான நீசர் களுக்கு ஒன்றும் நன்மை செய்ய, Ondrum Nanmai Seyya - ஒரு விதமான உபகாரமும் செய்யாத பெரு தேவரை, Peru Devarai - பெரிய பெருமாளை போற்றுகின்ற பெரியோர் தம், Periyor Tham - ஆழ்வானாகிற மஹானாடைய சுழல் இன்று பிடித்து, Suzhal Inru Pidithu - திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு இரு வினை பாசம் கழற்றி இருந்தேன், Iru Vinai Paasam Kazhatri Irundhen - புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்; யான், Yaan - இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன் இனி இறையும் வருந்தேன், Ini Irainum Varunthen - இனி மேல் கொஞ்சங்கூட வருத்தப் பட்ட மாட்டேன். |