திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3839 | இராமாநுச நூற்றந்தாதி || 63 | பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப்
படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே! | பதவுரை Show / Hideஅறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர், Aru Samayam Chediyai Thodarum Marul Serindhor - பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள் சிதைந்து ஒட, Sithaindhu Oda - பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக வந்து இப்படியை தொடரும், Vandhu Ippadiyai Thodarum - இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற மிக்க பண்டிதன், Mikka Pandithan - மஹா பண்டிதரான இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!, பிடியை தொடரும் களிறு என்னயான், Pidiyai Thodarum Kaliru Ennayaan - யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண் யானை போல யான், Yaan - அடியேன் சீர் பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும், Seer Pirangiya Un Adiyai Thodarum Padi Nalka Vendum - ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும். |