திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3839 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3839இராமாநுச நூற்றந்தாதி || 63
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர் அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச் செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப் படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!
பதவுரை Show / Hide
அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர், Aru Samayam Chediyai Thodarum Marul Serindhor - பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்
சிதைந்து ஒட, Sithaindhu Oda - பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக
வந்து இப்படியை தொடரும், Vandhu Ippadiyai Thodarum - இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற
மிக்க பண்டிதன், Mikka Pandithan - மஹா பண்டிதரான
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!,
பிடியை தொடரும் களிறு என்னயான், Pidiyai Thodarum Kaliru Ennayaan - யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண் யானை போல
யான், Yaan - அடியேன்
சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும், Seer Pirangiya Un Adiyai Thodarum Padi Nalka Vendum - ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும்.