திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3842 | இராமாநுச நூற்றந்தாதி || 66 | ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே | பதவுரை Show / Hideமாதவன், Madhavan - திருமால் வானம் கொடுப்பது, Vaanam Koduppathu - மோக்ஷம் அளிப்பது ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு, Gnanam Kanintha Nalam Kondo Naal Thorum Naipavarkku - ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்; வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன், Val Vinaiyen Manathil Eenam Kadintha Ramanujan - மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார் தன்னை எய்தினர்க்கு, Thannai Eydhinarukku - தம்மைப் பற்றினவர்களுக்கு அத்தானம் கொடுப்பது, Athaanam Koduppathu - அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது தன் தகவு என்னும் சரன் கொடுத்து, Than Thagavu Ennum Saran Koduthu - தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே) |