திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3842 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3842இராமாநுச நூற்றந்தாதி || 66
ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத் தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே
பதவுரை Show / Hide
மாதவன், Madhavan - திருமால்
வானம் கொடுப்பது, Vaanam Koduppathu - மோக்ஷம் அளிப்பது
ஞானம்  கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு, Gnanam Kanintha Nalam Kondo Naal Thorum Naipavarkku - ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன், Val Vinaiyen Manathil Eenam Kadintha Ramanujan - மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு, Thannai Eydhinarukku - தம்மைப் பற்றினவர்களுக்கு
அத்தானம் கொடுப்பது, Athaanam Koduppathu - அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது
தன் தகவு என்னும் சரன் கொடுத்து, Than Thagavu Ennum Saran Koduthu - தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே)