திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3843 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3843இராமாநுச நூற்றந்தாதி || 67
சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை- மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?
பதவுரை Show / Hide
சரணம் அடைந்த தருமனாக்கு ஆ, Saranam Adaindha Dharumanakku Aa - தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக
பண்டு, Pandhu - முற்காலத்திலே
நூற்றுவரை, Noorruvarai - துரியோதனன் முதலிய நூறு பேர்களை
மரணம் அடைவித்த மாயவன், Maranam Adaivitha Maayavan - சாகும்படி செய்த எம்பெருமான்
தன்னை வணங்க வைத்த கரணம் இவை, Thannai Vananga Vaiththa Karanam Ivai - தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை;
உமக்கு அன்று, Umakku Andru - உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று, Endru - என்று இவ்வாறாக உபதேசித்து
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
உயிர்கட்கு, Uyirkadku - ஆத்மாக்களுக்கு
அரண் அமைத்திலன் எல், Aran Amaiththilan El - ரக்ஷையைக் கற்பித்தில ராகில்
,ஆர் உயிர்க்கு, Ar Uyirku - இந்த அருமையான ஆத்மாக்களுக்கு
மற்று அரண் ஆர், Mattru Aran Ar - வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.)