திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3845 | இராமாநுச நூற்றந்தாதி || 69 | சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே | பதவுரை Show / Hideமுன் நாள், Mun Naal - ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில் சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து, Sindhaiyinodu Karanangal Yaavum Sithaindhu - சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு, Andham Utru Aazhnthathu Kandu - உப ஸமஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து என் தனக்கு, En Thanakku - (அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவர்களில் ஒருவனான) எனக்கு அவை, Avai - அந்தக் கரண களேபரங்களை அன்று, Andru - அக் காலத்தில் அருளால் தந்த அரங்கனாம், Arulaal Thanda Aranganam - க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம் தன் சரண் தந்திலன், Than Saran Thandhilan - தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்க வில்லை; எந்தை இராமாநுசன், Endhai Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் தான் வந்து, Thaan Vandhu - தாமாகவே வந்து அது தந்து, Adhu Thandhu - அந்தத் திருவடிகளைத் தந்தருளி இன்று என்னை எடுத்தனன், Indru Ennai Eduththanan - இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார். |