திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3846 | இராமாநுச நூற்றந்தாதி || 70 | என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை
தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே? | பதவுரை Show / Hideஇராமா நுச, Iraamaa Nucha - எம்பெருமானாரே! என்னையும் பார்த்து, Ennaiyum Paarthu - (ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி என் இயல்வையும் பார்த்து, En Iyvalvaiyum Paarthu - (இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில், Ena Il Pal Gunaththu Unnaiyum Paarkkil - எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில் அருள் செய்வதே நலம், Arul Seivadhai Nalam - ( எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது; அன்றி, Andri - இதுவொழிய மேலும் ஆராயுமளவில் என் பால் நலம் உளதே, En Paal Nalam Uladhe - என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை) உன்னை சார்ந்தவர், Unnai Sarnthavar - தேவரீரை ஆச்ரயித்தவர்கள் உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர், Un Perum Karunai Thannai En Paarppar - தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.) |