திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3846 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3846இராமாநுச நூற்றந்தாதி || 70
என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால் பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே?
பதவுரை Show / Hide
இராமா நுச, Iraamaa Nucha - எம்பெருமானாரே!
என்னையும் பார்த்து, Ennaiyum Paarthu - (ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி
என் இயல்வையும் பார்த்து, En Iyvalvaiyum Paarthu - (இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில், Ena Il Pal Gunaththu Unnaiyum Paarkkil - எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில்
அருள் செய்வதே நலம், Arul Seivadhai Nalam - ( எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி, Andri - இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என் பால் நலம் உளதே, En Paal Nalam Uladhe - என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)
உன்னை சார்ந்தவர், Unnai Sarnthavar - தேவரீரை ஆச்ரயித்தவர்கள்
உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர், Un Perum Karunai Thannai En Paarppar - தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.)