திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3847 | இராமாநுச நூற்றந்தாதி || 71 | சார்ந்த தென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான் மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந்தகையே | பதவுரை Show / Hideவண்மை, Vanmai - ஔதார்ய முடையரும் எம், Em - எமக்கு ஸ்வாமியும் பெரு தகை, Peru Thagai - பெருந் தன்மை யுடையருமான இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானாரே! எனது நெஞ்சு உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான், Un Thaal Inai Keel Sarnthadhu Anbudhaan - தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்ட பக்தியும் அத் தாமரை தாள்களுக்கு, Ath Thamarai Thaalgalukku - அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே மிகவும் கூர்ந்தது, Mikavum Koornthadhu - மிகவும் அதிகரித்தது. என் செய்கை, En Seigai - எனது செயலும் உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது, Un Than Gunangalukke Theerndhadhu - தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது; முன் செய் வினை, Mun Sei Vinai - முன்னே செய்த பாவங்களெல்லாம் நீசெய் வினை அதனால் பேர்ந்தது, Neesei Vinai Adhanal Perndhadhu - தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின. |