திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3847 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3847இராமாநுச நூற்றந்தாதி || 71
சார்ந்த தென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான் மிகவும் கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய் வினையதனால் பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந்தகையே
பதவுரை Show / Hide
வண்மை, Vanmai - ஔதார்ய முடையரும்
எம், Em - எமக்கு ஸ்வாமியும்
பெரு தகை, Peru Thagai - பெருந் தன்மை யுடையருமான
இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானாரே! எனது நெஞ்சு
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான், Un Thaal Inai Keel Sarnthadhu Anbudhaan - தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்ட பக்தியும்
அத் தாமரை தாள்களுக்கு, Ath Thamarai Thaalgalukku - அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே
மிகவும் கூர்ந்தது, Mikavum Koornthadhu - மிகவும் அதிகரித்தது.
என் செய்கை, En Seigai - எனது செயலும்
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது, Un Than Gunangalukke Theerndhadhu - தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது;
முன் செய் வினை, Mun Sei Vinai - முன்னே செய்த பாவங்களெல்லாம்
நீசெய் வினை அதனால் பேர்ந்தது, Neesei Vinai Adhanal Perndhadhu - தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.