திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3848 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3848இராமாநுச நூற்றந்தாதி || 72
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம் நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே
பதவுரை Show / Hide
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
மிக்க வண்மை செய்து, Mikka Vanmai Seidhu - தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி,
தீய சமயம கலகரை, Theeya Samayama Kalakarai - தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை
கைத்தனன், Kaithanain - ஒழித்து விட்டார்;
தூய, Thooja - பரிசுத்தமான
முறை நெறி தன்னை, Murai Nerai Thannai - வேத மார்க்கத்தை
காசினிக்கு உய்த்தனன், Kaasinikku Uyththanain - பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி, Endru Unni - என்று அநுஸந்தித்து
உள்ளம் நெய்த்து, Ullam Neyththu - நெஞ்சு கனிந்து
அவ்வன் போடு இருந்து, Avvan Podu Irundhu - அந்த ப்ரிதியோடே கூடி யிருந்து
ஏத்தும், Aeththum - (அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற
நிறை புகழோரருடனே, Nirai Pugazh Oorarudane - புகழ் நிறைந்த மஹான்களோடே
என்னை வைத்தனன், Ennai Vaiththanain - (என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார்.
நிறைபுகழோருடனே வைத்தனன்:, Nirai Pugazh Oorudane Vaiththanain - அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம்.