திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3848 | இராமாநுச நூற்றந்தாதி || 72 | கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே | பதவுரை Show / Hideஇராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் மிக்க வண்மை செய்து, Mikka Vanmai Seidhu - தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி, தீய சமயம கலகரை, Theeya Samayama Kalakarai - தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை கைத்தனன், Kaithanain - ஒழித்து விட்டார்; தூய, Thooja - பரிசுத்தமான முறை நெறி தன்னை, Murai Nerai Thannai - வேத மார்க்கத்தை காசினிக்கு உய்த்தனன், Kaasinikku Uyththanain - பூமியிலே ஸ்தாபித்தருளினார்; என்று உன்னி, Endru Unni - என்று அநுஸந்தித்து உள்ளம் நெய்த்து, Ullam Neyththu - நெஞ்சு கனிந்து அவ்வன் போடு இருந்து, Avvan Podu Irundhu - அந்த ப்ரிதியோடே கூடி யிருந்து ஏத்தும், Aeththum - (அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற நிறை புகழோரருடனே, Nirai Pugazh Oorarudane - புகழ் நிறைந்த மஹான்களோடே என்னை வைத்தனன், Ennai Vaiththanain - (என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார். நிறைபுகழோருடனே வைத்தனன்:, Nirai Pugazh Oorudane Vaiththanain - அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம். |