திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3851 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3851இராமாநுச நூற்றந்தாதி || 75
செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர் கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே
பதவுரை Show / Hide
செய் தலை, Sei Thalai - வயல்களில்
சங்கம், Sangam - சங்குகளானவை
செழு திரு முத்தம், Sezhu Thiru Muththam - அழகிய முத்துக்களை
ஈனும் திரு அரங்கர், Eenum Thiru Arangkar - உண்டாக்கு மிடமான திரு அரங்கமா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்
கைத் தலத்து, Kait Thalathu - தமது திருக் கையிலே
ஆழியும் சங்கமும் எந்தி, Aazhiyum Sangamum Endhi - திரு வாழி திருக் கையிலே தரித்துக் கொண்டு
நம் கண் முகப்பே, Nam Kan Mugappe - நமது கண்ணெதிரில்
மொய்த்து, Moydhu - வந்து நெருங்கி
அலைத்து, Alaiththu - புத்தியைக் கெடுத்து
உண்னை விடேன் என்று இருக்கிலும், Unnai Vidaen Endru Irukkilum - உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும்
இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானரே
நின் புகழே, Nin Pugazhe - தேவரீருடைய திவ்ய குணங்களே
என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று, Ennai Vandu Muttram Moydhu Nindru - என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு
அலைக்கும், Alaikkum - ஆகர்ஷிக்கின்றன