திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3852 | இராமாநுச நூற்றந்தாதி || 76 | நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக்கும்அது, இராமானுச! இவை யீந்தருளே. | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை, Nindra Van Keerthiyum Neel Punalum Nirai - நிலைநின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள வேங்கடம் பொன் குன்றமும், Vengadam Pon Kuntrum - திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும் வைகுந்தம் நாடும், Vaikundham Naadum - ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும் குவலிய பால் கடலும், Kuvaliya Paal Kadalum - கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும் உன் தனக்கு, Un Thanakku - தேவரீருக்கு எத்தினை இன்பம் தரும், Eththinai Inbam Tharum - எவ்வளவு ஆநந்த்தை விளைக்குமோ உன் இணை மலர் தாள், Un Inai Malar Thaal - தேவரீருடைய உபயபாதாரவிந்தங்கள் என் தனக்கும் அது, En Thanakkum Adhu - எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை யுண்டாக்கும்; இவை, Ivai - இப்படிப்பட்ட திருவடிகளை. ஈந்தருள், Eendharul - அடியேனுக்குத் தந்தருள வேணும். |