திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3853 | இராமாநுச நூற்றந்தாதி || 77 | ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? | பதவுரை Show / Hideஈயாத, Eeyaadha - (இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத இன் அருள், In Arul - விலக்ஷணமான க்ருபையை ஈந்தனன், Eendhanan - அடியேனுக்குச் செய்தருளின வரும் எண் இல் மறை குறும்பை, En Il Marai Kurumbai - எண்ணிறந்த வேத விரோதிமதங்களை அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன், Ammairai Palporulaal Paayndhanan - அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும் கீர்த்தியினால், Keerthiyinaal - தமது கீர்த்தியாலே இப்படி அனைத்தும் எய்ந்தனன், Ippadi Anaithum Eyndhanan - இப்பூமியெங்கும் வியாபித்தவரும் என் வினைகளை, En Vinaigalai - எனது கருமங்களை வேர்பறியகாய்ந்தனன், Verpariyakaayndhanan - வேரோடே அரும் படி போக்கினவரும் வண்மை, Vanmai - ஔதார்யமே வடிவு கொண்ட வருமான இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார்க்கு இனி என் கருத்து, Ini En Karuthu - இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ? |