திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3853 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3853இராமாநுச நூற்றந்தாதி || 77
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப் பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?
பதவுரை Show / Hide
ஈயாத, Eeyaadha - (இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத
இன் அருள், In Arul - விலக்ஷணமான க்ருபையை
ஈந்தனன், Eendhanan - அடியேனுக்குச் செய்தருளின வரும்
எண் இல் மறை குறும்பை, En Il Marai Kurumbai - எண்ணிறந்த      வேத விரோதிமதங்களை
அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன், Ammairai Palporulaal Paayndhanan - அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்
கீர்த்தியினால், Keerthiyinaal - தமது கீர்த்தியாலே
இப்படி அனைத்தும் எய்ந்தனன், Ippadi Anaithum Eyndhanan - இப்பூமியெங்கும் வியாபித்தவரும்
என் வினைகளை, En Vinaigalai - எனது கருமங்களை
வேர்பறியகாய்ந்தனன், Verpariyakaayndhanan - வேரோடே அரும் படி போக்கினவரும்
வண்மை, Vanmai - ஔதார்யமே வடிவு கொண்ட வருமான
இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார்க்கு
இனி என் கருத்து, Ini En Karuthu - இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ?