திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3854 | இராமாநுச நூற்றந்தாதி || 78 | கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே | பதவுரை Show / Hideஎம் இராமாநுச, Em Iraamaanusa - எம்பெருமானைரை! நீ, Nee - தேவரீர் கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து, Karutha Ariya Varuthaththinaal Mika Vanchiththu - நெஞ்சால் நினைக்க முடியாத பரிச்ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி கருத்தில் புகுந்து, Karuththil Pugundhu - (எனது) நெஞ்சிலே வந்து புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி, Ullil Kallam Kazhatri - உள்ளே யிருந்த ஆத்மாபஹார தோஷத்தைப் போக்கி திருத்தி, Thiruththi - சிக்ஷித்து இந்த மண் அகத்தே, Indha Mann Agatthae - இந்த லோகத்திலே திருமகள் கேள்மனாக்கு, Thirumagal Kaelmanakku - திருமாலுக்கு ஆளாம்படி ஆக்கிய பின், Aakkiya Pin - பண்ணிண பின்பு மற்று ஒர் பொய், Mattru Or Poi - (இதற்கு மாறான ) வேறு எந்த தப்பு விஷயமும் பொருள் என் நெஞ்சில், Porul En Nenjinil - என் மனத்தில் பொருத்தப் படாது, Poruththap Padadhu - பொருந்த மாட்டாது. |