திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3855 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3855இராமாநுச நூற்றந்தாதி || 79
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து,இந்தப் பூதலத்தே மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென்றுலர்ந் தவமே ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே
பதவுரை Show / Hide
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து, Poyyai Surakkum Porulai Thurandhu - பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின்) அர்த்தங்களைக் கண்டித்து
இந்த பூதலத்தே, Indha Poodhalatthae - இப் பூமியிலே
மெய்யை புரக்கும், Meiyyai Purakkum - ஸத்யத்தை ரக்ஷிக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
நிற்க, Nirka - எழுந்தருளி யிருக்கும் போது
வையத்து உள்ளோர், Vaiyaththu Ullor - இப் பூமியிலுள்ளவர்கள்
நம்மை உய்யக் கொள்ள வல்ல, Nammai Uyya Kolla Valla - நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடிய
வேறு தெய்வம் இங்கு யாது என்று, Veeru Deivam Ingu Yaadhu Endru - வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசாரித்துக் (கொண்டு)
உலர்ந்து, Ularndhu - மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து
நல் அறிவு இமந்து, Nal Arivu Imandhu - (எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கை யாகிற) நல்ல ஞானம் பெறாமல்
அவமே, Avame - வீணாக
ஐயம் படா நிற்பர், Aiyam Pada Nirpar - ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா!