திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3857 | இராமாநுச நூற்றந்தாதி || 81 | சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே | பதவுரை Show / Hideஉன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி, Un Than Thunai Adikeezh Soarvu Indri - தேவரீருடைய உபய பாதங்களின் கீழே தொண்டு பட்டவர் பால், Thondu Pattavar Paal - சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில் சார்வு இன்றி நின்ற எனக்கு, Saarvu Indri Nindra Enakku - பொருத்த மில்லாமலிருந்த எனக்கு இன்று, Indru - இன்றைத் தினத்தில் அரங்கன் செய்ய தான் இணைகள், Arangan Seyya Thaan Ingaigal - பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா, Pervu Indri Peruththum Iraamaa Nuchaa - ஒருகாலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே! இனி, Ini - இப்படியான பின்பு தெரிவுறில், Therivuril - ஆராயுமளவில் உன், Un - தேவரீருடைய சீர் ஒன்றிய கருணைக்கு, Seer Onriya Karunaikku - சிறந்த திருவருளுக்கு மாறு இல்லை, Maaru Illai - ஒப்பு இல்லை |