திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3861 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3861இராமாநுச நூற்றந்தாதி || 85
ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க சோதியை நாதன் என வெறி யாதுழல் கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர் பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை
பதவுரை Show / Hide
ஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய், Othiya Vegathin Ul Porul Aay - அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்உட்பொருளாயும்
அதன் உச்சி மிக்க சோதியை, Adhan Ucchi Mikka Sothiyai - அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை
நாதன் என அறியாது, Nadhan Enna Ariyadhu - ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர், Uzhalginra Thondar - கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய
பேதைமை, Pethaimai - அவிவேகத்தை
தீர்த்த, Theertha - போக்கடித்த
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
தொழும், Thozhum - ஸேவிக்கின்ற
பெரியோர், Periyor - மஹான்களுடைய
பாதம் அல்லால், Paadham Allal - திருவடிகள் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு, En Than Aar Uyirkkum - எனது அருமையான ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் பற்று இல்லை, Yadhu Ondrum Patru Illai - வேறு ஏதேனும் புகலிடமில்லை.