திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3861 | இராமாநுச நூற்றந்தாதி || 85 | ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வெறி யாதுழல் கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை | பதவுரை Show / Hideஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய், Othiya Vegathin Ul Porul Aay - அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்உட்பொருளாயும் அதன் உச்சி மிக்க சோதியை, Adhan Ucchi Mikka Sothiyai - அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை நாதன் என அறியாது, Nadhan Enna Ariyadhu - ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல் உழல்கின்ற தொண்டர், Uzhalginra Thondar - கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய பேதைமை, Pethaimai - அவிவேகத்தை தீர்த்த, Theertha - போக்கடித்த இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை தொழும், Thozhum - ஸேவிக்கின்ற பெரியோர், Periyor - மஹான்களுடைய பாதம் அல்லால், Paadham Allal - திருவடிகள் தவிர என் தன் ஆர் உயிர்க்கு, En Than Aar Uyirkkum - எனது அருமையான ஆத்மாவுக்கு யாது ஒன்றும் பற்று இல்லை, Yadhu Ondrum Patru Illai - வேறு ஏதேனும் புகலிடமில்லை. |