திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3863 | இராமாநுச நூற்றந்தாதி || 87 | பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்
குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில்
புரியு நன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும் கலியே | பதவுரை Show / Hideபெரியவர் பேசிலும், Periyavar Pesilum - ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும் பேதையர் பேசிலும், Pethaiyar Pesilum - ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும் தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று, Than Gunangadku Uriya Sol Endrum Udaiyavan Endru Endru - தனது திருக் குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பல காலுஞ் சொல்லி உணர்வில் மிக்கோர் தெரியும், Unarvil Mikkoor Theriyum - சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற வண் கீர்த்தி, Van Keerthi - திவ்ய கீர்த்தியை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் மறை தேர்ந்து, Marai Therndhu - வேதங்களை ஆராய்ந்து உலகில், Ulagil - இவ் வுலகத்தில் புரியும், Puriyum - உபதேசித்தருளின நல் ஞானம் பொருந்தாதவரை, Nal Nyanam Porundhavarai - நல்ல ஞானத்தில் சேராதவர்களை கலி பொரும், Kali Porum - கலி புருஷன் பீடிப்பன். |