திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3863 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3863இராமாநுச நூற்றந்தாதி || 87
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட் குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில் புரியு நன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும் கலியே
பதவுரை Show / Hide
பெரியவர் பேசிலும், Periyavar Pesilum - ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்
பேதையர் பேசிலும், Pethaiyar Pesilum - ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்
தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று, Than Gunangadku Uriya Sol Endrum Udaiyavan Endru Endru - தனது திருக் குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பல காலுஞ் சொல்லி
உணர்வில் மிக்கோர் தெரியும், Unarvil Mikkoor Theriyum - சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற
வண் கீர்த்தி, Van Keerthi - திவ்ய கீர்த்தியை யுடையரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
மறை தேர்ந்து, Marai Therndhu - வேதங்களை ஆராய்ந்து
உலகில், Ulagil - இவ் வுலகத்தில்
புரியும், Puriyum - உபதேசித்தருளின
நல் ஞானம் பொருந்தாதவரை, Nal Nyanam Porundhavarai - நல்ல ஞானத்தில் சேராதவர்களை
கலி பொரும், Kali Porum - கலி புருஷன் பீடிப்பன்.