திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3864 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3864இராமாநுச நூற்றந்தாதி || 88
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால் வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம் புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே
பதவுரை Show / Hide
கலி மிக்க, Kali Mikka - நிலவளம் மிகுந்த
செந்நெல் கழனி, Sennel Kazhani - செந்நெல் கழனிகளை யுடைய
குறையல், Kuraiyal - திருக் குறையலூரில் அவதரித்தவராய்
கலை பெருமான், Kalai Perumaan - சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த் திரு மங்கை யாழ்வாருடைய
மிக்க ஒலி பாடலை, Mikka Oli Paadalai - அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை
உண்டு, Undu - அநுபவித்து
தன் உள்ளம் தடித்து, Than Ullam Thadithu - தமது திருவுள்ளம்
அதனால் வலி மிக்கம், Adhanal Vali Mikkam - அத்தால் மிடுக்கு அதிகரித்த
சீயம், Seeyam - சிங்கம் போன்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்,
மறை வாதியராம் புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை, Marai Vadhiyaram Puli Mikkadhu Endru Ip Bhuvanathil Vandhamai - வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை
போற்றுவன், Poattruvan - புகழ்ந்திடக் கடவேன்.