திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3865 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3865இராமாநுச நூற்றந்தாதி || 89
போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர் ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே
பதவுரை Show / Hide
போற்ற அரு சீலத்து, Poattr Aru Seelaththu - புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தை யுடைய
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே;
நின் புகழ், Nin Pugazh - தேவரீருடைய திருக் குணங்களை
தெரிந்து சாற்றுவனேல், Therinthu Sattruvanel - உணர்ந்து பேசுவேனாகில்
அது, Adhu - (நீசனாகிய நான் ) பேசுகிறவது
தாழ்வு, Thazhvu - (தேவரீருக்கு) அவத்யமாம்;
அது தீரில், Adhu Theeril - அப்படி நான் பேசுவது தவிர்த்தல்
உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம், Un Seer Thanakku Or Aetram - தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மையாகும்
என்றே கொண்டு இருக்கிலும், Endrae Kondu Irukkilum - என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும்
என் மனம், En Manam - எனது நெஞ்சானது
எத்தி அன்றி, Ethi Andri - (தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது
ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாது;
இதற்கு, Idharku - இவ் விஷயத்திலே
என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன், En Ninaivai Endrittu Anjuvan - தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன்.