திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3867 | இராமாநுச நூற்றந்தாதி || 91 | மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே | பதவுரை Show / Hideஆகமம் வாதியர், Aagamam Vaathiyar - (சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள் மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று கூறும், Koorum - (சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற அவம் பொருள் ஆம் இருள் சுரந்து, Avam Porul Aam Irul Surandhu - நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்) எய்த்த, Eyththa - கெட்டுப் போன உலகு, Ulaku - உலகத்தவர்களுடைய இருள், Irul - அஜ்ஞாநாந்தகாரமானது நீங்க, Neenga - போகும்படியாக தன், Than - தம்முடைய ஈண்டிய சீர் அருள் சுரந்து, Eendiya Seer Arul Surandhu - விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள், Ella Uyirkadkum Nadhan Arangan Ennum Porul - “எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை சுரந்தான், Surandhaan - வெளியிட்டவரான எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் மிக்க புண்ணியன், Mikka Punniyan - சிறந்த புண்ணியாத்மா |