திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3867 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3867இராமாநுச நூற்றந்தாதி || 91
மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம் இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே
பதவுரை Show / Hide
ஆகமம் வாதியர், Aagamam Vaathiyar - (சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள்
மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று
கூறும், Koorum - (சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற
அவம் பொருள் ஆம் இருள் சுரந்து, Avam Porul Aam Irul Surandhu - நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்)
எய்த்த, Eyththa - கெட்டுப் போன
உலகு, Ulaku - உலகத்தவர்களுடைய
இருள், Irul - அஜ்ஞாநாந்தகாரமானது
நீங்க, Neenga - போகும்படியாக
தன், Than - தம்முடைய
ஈண்டிய சீர் அருள் சுரந்து, Eendiya Seer Arul Surandhu - விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி
எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள், Ella Uyirkadkum Nadhan Arangan Ennum Porul - “எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை
சுரந்தான், Surandhaan - வெளியிட்டவரான
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
மிக்க புண்ணியன், Mikka Punniyan - சிறந்த புண்ணியாத்மா