திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3868 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3868இராமாநுச நூற்றந்தாதி || 92
புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும் நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க் கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே
பதவுரை Show / Hide
செம்மை நூல் புலவர்க்கு, Semmai Nool Pulavarkku - நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும்
எண்ண அரு கீர்த்தி இராமாநுச, Enna Aru Keerthi Raamaanusa - அளவிட முடியாத கீர்த்தியை யுடைய
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!,
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன், Punniyam Nonbu Purindhum Ileen - புண்ணியமான ஒருவிரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;
அடி போற்றி செய்யும், Adi Poatri Seyyum - தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான
நுண் அரு கேள்வி, Nun Aru Kelvi - ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை
நுவன்றும் இலேன் இன்று, Nuvandrum Ileen Inru - (செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும்
என், En - இன்று
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும், Kannullum Nenjuullum - அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும்
புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை, Pugundhu Nindra Ik Kaaranam Katturai - புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச்செய்ய வேணும்.