திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3868 | இராமாநுச நூற்றந்தாதி || 92 | புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே | பதவுரை Show / Hideசெம்மை நூல் புலவர்க்கு, Semmai Nool Pulavarkku - நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும் எண்ண அரு கீர்த்தி இராமாநுச, Enna Aru Keerthi Raamaanusa - அளவிட முடியாத கீர்த்தியை யுடைய இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!, புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன், Punniyam Nonbu Purindhum Ileen - புண்ணியமான ஒருவிரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை; அடி போற்றி செய்யும், Adi Poatri Seyyum - தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான நுண் அரு கேள்வி, Nun Aru Kelvi - ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை நுவன்றும் இலேன் இன்று, Nuvandrum Ileen Inru - (செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும் என், En - இன்று கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும், Kannullum Nenjuullum - அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும் புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை, Pugundhu Nindra Ik Kaaranam Katturai - புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச்செய்ய வேணும். |