திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3869 | இராமாநுச நூற்றந்தாதி || 93 | கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரனல்லனே,என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே | பதவுரை Show / Hideகிட்டி, Kitti - அடியேன் பக்கல் வந்து நெருங்கி தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி, Than Arul Ennum Oru Vaal Uruvi - தம்முடைய கிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்) என் பெருவினையை கிழங்கொடு வெட்டி களைந்த, En Peruvinaiyai Kizhankodu Vetti Kalaindha - எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த இராமாநுசன் என்னும் மெய் தவன், Iramanuchan Ennum Meiya Thavan - எம்பெருமானாரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால் கயவர், Kayavar - துஷ்டர்களான குத்ருஷ்டிகள் கட்டம் பொருளை மறை பொருள் என்று சொல்லும் பெட்டை, Kattam Porulai Marai Porul Endru Sollum Pettai - தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக் கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை கெடுக்கும் பிரான் அல்லனே, Kedukkum Piraan Allane - கண்டித்தொழித்த மஹா நுபவரமனறோ. |