திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3869 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3869இராமாநுச நூற்றந்தாதி || 93
கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரனல்லனே,என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே
பதவுரை Show / Hide
கிட்டி, Kitti - அடியேன் பக்கல் வந்து நெருங்கி
தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி, Than Arul Ennum Oru Vaal Uruvi - தம்முடைய கிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்)
என் பெருவினையை கிழங்கொடு வெட்டி களைந்த, En Peruvinaiyai Kizhankodu Vetti Kalaindha - எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த
இராமாநுசன் என்னும் மெய் தவன், Iramanuchan Ennum Meiya Thavan - எம்பெருமானாரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால்
கயவர், Kayavar - துஷ்டர்களான குத்ருஷ்டிகள்
கட்டம் பொருளை மறை  பொருள் என்று சொல்லும் பெட்டை, Kattam Porulai Marai Porul Endru Sollum Pettai - தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக் கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை
கெடுக்கும் பிரான் அல்லனே, Kedukkum Piraan Allane - கண்டித்தொழித்த மஹா நுபவரமனறோ.