திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3870 | இராமாநுச நூற்றந்தாதி || 94 | தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப் பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள் மகிழ்ந்தே | பதவுரை Show / Hideதீது இல் இராமாநுசன், Theethu Il Iramanuchan - எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார் தன்னை சார்ந்தவர்கட்கு, Thannai Sarnthavarkadku - தம்மை வந்து அடைந்த வர்களுக்கு தவம் தரும், Thavam Tharum - சரணாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்; சரியா பிறவி பவம் தரும் தீவினை, Sariya Piravi Bhavam Tharum Theevinai - நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடு வினைகளை பாற்றி தரும், Paatri Tharum - போக்கடித் தருள்வர்; பரம் தாமம் என்னும் திவம் தரும், Param Thamam Ennum Thivam Tharum - பரமபதமென்று சொல்லப்படுகிற வானுலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு) யான், Yaan - அடியேன் அவன் சீர் அன்றி, Avan Seer Andri - அவ் வெம்பெருமானாருடைய திருக் குணங்களைத் தவிர்த்து ஒன்றும், Ondrum - வேறொன்றையும் உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன், Ul Magizhndhu Uvandu Arundhen - மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன். |