திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3871 | இராமாநுச நூற்றந்தாதி || 95 | உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே | பதவுரை Show / Hideஉயிர்களுக்கு உள் நின்று, Uyirgalukku Ul Nindru - எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு உற்றனவே செய்து, Utranave Seidhu - ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு அவர்க்கு, Avarkku - அவ் வாத்மாக்களுக்கு உயவே பண்ணும் பரனாம், Uyave Pannum Paranaam - உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம் பரிவு இலன் ஆம படி, Parivu Ilan Aama Padi - (ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதி யுடையவனல்லன் என்ன வேண்டும் படியாக பல் உயிர்க்கும், Pal Uyirkkum - ஸகல ஆத்மாக்களுக்கும் வீடு அளிப்பான், Veedu Alippaan - மோக்ஷத்தை அருள்வதற்காக எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் விண்ணின் தலை நின்று, Vinnin Thalai Nindru - ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் மண்ணின் தலத்து உதித்து, Mannin Thalathu Uthithu - இப் பூதலத்திலே அவதரித்து உய் மறை நாலும், Uy Marai Naalum - எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும் வளர்த்தனன், Valarthanan - குறைவின்றி வளரச் செய்ய தருளினார். |