திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3871 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3871இராமாநுச நூற்றந்தாதி || 95
உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன் மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே
பதவுரை Show / Hide
உயிர்களுக்கு உள் நின்று, Uyirgalukku Ul Nindru - எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு
உற்றனவே செய்து, Utranave Seidhu - ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு
அவர்க்கு, Avarkku - அவ் வாத்மாக்களுக்கு
உயவே பண்ணும் பரனாம், Uyave Pannum Paranaam - உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம்
பரிவு இலன் ஆம படி, Parivu Ilan Aama Padi - (ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதி யுடையவனல்லன் என்ன வேண்டும் படியாக
பல் உயிர்க்கும், Pal Uyirkkum - ஸகல ஆத்மாக்களுக்கும்
வீடு அளிப்பான், Veedu Alippaan - மோக்ஷத்தை அருள்வதற்காக
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று, Vinnin Thalai Nindru - ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
மண்ணின் தலத்து உதித்து, Mannin Thalathu Uthithu - இப் பூதலத்திலே அவதரித்து
உய் மறை நாலும், Uy Marai Naalum - எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும்
வளர்த்தனன், Valarthanan - குறைவின்றி வளரச் செய்ய தருளினார்.