திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3873 | இராமாநுச நூற்றந்தாதி || 97 | தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள்
தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால்
தன்னை யுற் றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து
தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே | பதவுரை Show / Hideஇராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாரானவர், தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து, Thannai Utrar Andri Thannai Utrarai Kunam Sarridum Thanmai Utrar Illai Endru Arinthu - தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திருவுள்ளம் பற்றி என்னை, Ennai - அடியேனை இன்று, Indru - இன்றைத் தினத்தில் தன் தகவால், Than Thakaval - தமது அருளாலே தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர், Thannai Utra Aal Seyyum Thanmaiyinor - தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய மன்னா தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய, Manna Thamarai Thal Thannai Utra Aal Seyya - ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி உய்த்தான், Uytthan - வைத்தருளினார். |