திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3874 | இராமாநுச நூற்றந்தாதி || 98 | இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமா னுசன்நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென் றால், மனமே! நையல் மேவுதற்கே? | பதவுரை Show / Hideநம் இராமாநுசன், Nam Ramanujan - நம் எம்பெருமானார், சரணம் என்றால், Saranam Endral - உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால் இனிய சுவர்க்கத்திலே இடுமே, Iniya Suvarkkaththile Idume - (சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ? இன்னம், Innam - அல்லது நரகில் இட்டு சுடுமே, Naragil Ittu Sudume - நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ? அவற்றை தொடர்தரு, Avattrai Thodartharu - அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற தொல்லை சுழல் பிறப் பில், Thollai Suzhal Pirap Pil - அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே நடுமே, Nadume - நிறுத்துவரோ? இனி, Ini - மேலுள்ள காலங்களில் நம்மை, Nammai - நம்மை நம் வசத்தே விடுமே, Nam Vachathae Vidume - நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ? மனமே!, Maname - ஒ நெஞ்சே! மேவுதற்கு, Mevudharakku - பேறு பெறும் விஷயமாக நையல், Naiyal - நீ கரையவேண்டா. |