திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3874 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3874இராமாநுச நூற்றந்தாதி || 98
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச் சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில் நடுமே யினி நம் இராமா னுசன்நம்மை நம் வசத்தே விடுமே சரணமென் றால், மனமே! நையல் மேவுதற்கே?
பதவுரை Show / Hide
நம் இராமாநுசன், Nam Ramanujan - நம் எம்பெருமானார்,
சரணம் என்றால், Saranam Endral - உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால்
இனிய சுவர்க்கத்திலே இடுமே, Iniya Suvarkkaththile Idume - (சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ?
இன்னம், Innam - அல்லது
நரகில் இட்டு சுடுமே, Naragil Ittu Sudume - நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ?
அவற்றை தொடர்தரு, Avattrai Thodartharu - அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற
தொல்லை சுழல் பிறப் பில், Thollai Suzhal Pirap Pil - அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே
நடுமே, Nadume - நிறுத்துவரோ?
இனி, Ini - மேலுள்ள காலங்களில்
நம்மை, Nammai - நம்மை
நம் வசத்தே விடுமே, Nam Vachathae Vidume - நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ?
மனமே!, Maname - ஒ நெஞ்சே!
மேவுதற்கு, Mevudharakku - பேறு பெறும் விஷயமாக
நையல், Naiyal - நீ கரையவேண்டா.