திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3876 | இராமாநுச நூற்றந்தாதி || 100 | போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! என் நெஞ்சு என்னும் பொன் வண்டு, En Nenju Ennum Pon Vandu - எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது உனது அடி போதில், Unathu Adi Pothil - தேவரீருடையதிருவடித்தாமரைகளில் ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, On Seer Aam Theli Then Undu Amarnthida Vendi - அழகிய குணங்களாகிற தேனைப் பருகி நித்ய வாஸம் பண்ண விரும்பி நின் பால், Nin Paal - தேவரீரிடந்தில் போந்தது, Ponthathu - வந்து சேர்ந்தது; அதுவே, Adhuve - அத் திருக் குணங்களையே ஈந்திட வேண்டும், Eendhida Vendum - அளித்தருள வேணும்; இது அன்றி, Idhu Andri - இத் திருக் குணங்களைத் தவிர ஒன்றும், Ondrum - வேறொன்றையும் மாந்த கில்லாது, Mantha Killaadhu - (நெஞ்சு) புஜிக்க மாட்டாது; இனி, Ini - இப்படியான பின்பு மற்று ஒன்று காட்டி, Mattru Ondru Kaatti - வேறொரு விஷயத்தைக் காட்டி மயக்கிடேல், Mayakkidhel - மயக்க வேண்டா |