திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3877 | இராமாநுச நூற்றந்தாதி || 101 | மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி
நயக்கும் அவர்க்கி திழுக் கென்பர், நல்லவர் என்றும் நைந்தே | பதவுரை Show / Hideமயக்கும், Mayakkum - “அஜ்ஞானத்தை விளைக்க வல்ல இரு வினை, Iru Vinai - புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற வல்லியல், Valliyal - விலங்கில் பூண்டு, Poondhu - அகப்பட்டுக் கொண்டு மதி மயங்கி, Madhi Mayangi - அறிவு கெட்டு துயக்கும், Thuyakkum - ப்ரமிச்கச் செய்கிற பிறவியியல், Piraviyial - ஸம்ஸாரத்திலே தோன்றிய என்னை, Thonriya Ennai - சிறந்த அடியேனை துயர் அகற்றி உய கொண்டு, Thuyar Akattri Uya Kondu - துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து நல்கும், Nalkum - அருள் செய்கின்ற இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! என்றது இது, Endrathu Idhu - என்று தேவரீருடைய பாவநத்வத்தைப் பேசு கையாகிற ஈது உன்னை உன்னி நைந்து, Unnai Unni Naindhu - தேவரீரை அநுஸந்தித்து உருகி என்றும் நயக்கு, Endrum Nayakku - எப்போதும் ஆசையுடனிருப்பவர்களுக்கு இழுக்கு என்பர் நல்லவர், Izhukku Enbar Nallavar - தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள். |