திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3879 | இராமாநுச நூற்றந்தாதி || 103 | வளர்ந்த வெங் கோப மடங்க லொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய் வினை நோய்
களைந்து நன் ஞானம் அளித்தனன் கையிற் கனி யென்னவே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்னொரு காலத்தில் வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய், Valarntha Vem Kobam Madangal Ondru Aay - கடூரமான கோபம் மேலிடப் பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி வாள் அவுணன், Vaal Avunan - வாளை யுடைய ஹிரண்யா ஸுரனது கிளர்ந்த, Kilarndha - செருக்கினால் நெறித்திருந்த பொன் ஆகம், Pon Aagam - பொன் போன்ற மார்வை கிழித்தவன், Kizhiththavan - கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானுடைய கீர்த்தி பயிர் எழுந்து, Keerthi Payir Ezhunthu - திருப் புகழ்களாகிற பயிர் வளர்ந்து விளைந்திடும் சிந்தை, Vilainthidum Sindhai - விளையப் பெற்ற திருவுள்ளத்தை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் தன் மெய் வினை நோய் களைந்து, En Than Meiya Vinaik Kalanthu - எனது உடலைப் பற்றி யிருக்கிற வினை நோய்களை யெல்லா மொழித்து கையில் கனி என்ன, Kaiyil Kani Enna - கையிலங்கு நெல்லிக் கனி போலே ஸுலபமாக நல் ஞானம் அளித்தனன், Nal Gnanam Aliththan - விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார் |