திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3880 | இராமாநுச நூற்றந்தாதி || 104 | கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே! | பதவுரை Show / Hideசெழு கொண்டல், Sezhu Konda - ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற என் இராமாநுச, En Iramaanusa - எம்பெருமானாரே! கண்ணனை, Kannana - எம்பெருமானை கையில் கனி என்ன, Kaiyil Kani Enna - உள்ளங்கை நெல்லிக் கனி போலே காட்டி தரினாம், Kaatti Tharinaam - காட்டிக் கொடுத்தாலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றியான் வேண்டிலன், Un Than Meiyil Pirangiya Seer Anriyaan Vendilan - தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண் வைக்க மாட்டேன்; நிரயம் தொய்யில், Niraym Thoyyil - ஸம்ஸார நரகக் குழியில் கிடக்கிலும், Kidakkilum - அழுந்திக் கிடந்தேனாகிலும் சோதி விண் சேரிலும், Sothi Vin Cherilum - சோதி மயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும் இவ் அருள், Iv Arul - (தேவரீருடைய திரு மேனி யழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை நீ செய்யில், Nee Seyyil - தேவரீர் செய்தருளினால் தான் தரிப்பான், Tharippaan - (ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவி நிற்பேன். |