திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3881 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3881இராமாநுச நூற்றந்தாதி || 105
செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள் தொழுந் திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே
பதவுரை Show / Hide
செழு திரை பால் கடல், Sezhu Thirai Paal Kadal - அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில்
கண் துயில், Kan Thuyil - பள்ளி கொண்டிராநின்ற
மாயன், Maayan - ஸர்வேச்வரனாடைய
திரு அடி கீழ், Thiru Adi Keezh - திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார், Vizhundu Iruppaar - விழுந்து கிடக்கும் மஹான்களுடைய
நெஞ்சில்  மேவும், Nenjiil Mevum - ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற
நல் ஞானி, Nal Nyaani - சிறந்த ஞானியாயும்
நல்வேதியர்கள் தொழும் திரு பாதன், Nalvedhiyargal Thozhum Thiru Paadhan - நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயுமிருக்கிற
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
தொழும், Thozhum - ஸேவிக்கின்ற
பெரியோர், Periyor - மஹாத்மாக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம், Ezunthu Iraithu Aaduum Idam - உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம்
அடியேனுக்கு இருப்பு இடம், Adiyenukku Iruppu Idam - அடியேன் வஸிக்குமிடமாகும்.