திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3882 | இராமாநுச நூற்றந்தாதி || 106 | இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே | பதவுரை Show / Hideமாயனாக்கு, Maayanakku - ஸர்வேச்வரனுக்கு இருப்பு இடம், Iruppu Idam - வாஸஸ்தானம் (எவை யென்றால்) வைகுந்தம், Vaikundham - பரமபதமும் வேங்கடம், Vengadam - திருவேங்கடமலையும் மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம், Malirunj Cholai Ennum Poruppu Idam - திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையாம்) என்பர் கல்லோர், Enbar Kallor - என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள். மாயன், Maayan - (இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன் அவை தன்னொடும், Avai Thannodum - அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது வந்து இருப்பிடம், Vandhu Iruppidam - எம்பெருமானாருடைய இராமாநுசன் மனத்து, Iraamanusan Manathu - திரு வுள்ளத்திலேயாம்; அவன், Avan - அவ் வெம்பெருமானார் தாம் இன்று வந்து, Indru Vandhu - இப்போது வந்து தனக்கு இன்பு உற இருப்பிடம், Thanakku Inbu Ura Iruppidam - தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது என் தன் இதயத்து உள்ளே, En Than Idhayaththu Ullae - அடியேனுடைய ஹ்ருத யத்தினுள்ளேயாம். |